மின்சிட்டு வரும் தேன்சிட்டுகளை சிரம் தாழ்ந்து வரவேற்கிறேன்.
மீண்டும் பருக வருக..! கருத்தை அள்ளித் தருக..!

29.7.15

þó¾¢Â §¾ºò¾¢ý ÅÇ÷¨Â§Â
þ¾Âò ÐÊôÀ¡ö Á¡üȢ즸¡ñÎ
¿¡ðÊý ÅÇ÷ ¿¡ýÌ ÍÅ÷¸ÙìÌû¾¡¦ÉÉ
¾ûÇ¡¾ ž¢Öõ ÐûÇø ¦¸¡ñÎ
àì¸ò¾¢ø ÅÕžøÄ ¸É×-¯ý¨É
àí¸ Å¢¼¡Áø ¦ºöÅо¡ý ¸É× ±É
¯Èì¸ò¾¢ø þÕó¾ þ¨Ç»÷¸¨Ç
¾ðʦÂØôÀ¢Â ¾Á¢úò¾¡Â¢ý ¾¨ÄÁ¸§É
¿£í¸û ¬º¢Ã¢Âáö
«Ï Ţﻡɢ¡ö
²×¸¨½ Å¢ò¾¸Ã¡ö
«È¢Å¢Âø ¬§Ä¡º¸Ã¡ö
¿¡ðÊý Ó¾ø ÌÊÁ¸É¡ö
±ò¾¨É Àð¼í¸û..±ò¾¨É À¾Å¢¸û...±ò¾¨É Å¢Õиû..!
±øÄ¡ÅüÈ¢üÌõ ¬îºÃ¢Âí¸û¾¡ý Å¢¨¼Â¡ö ÅÕ¸¢ÈÐ
¯í¸Ç¡ø ÁðÎó¾¡ý ¯Èì¸ò¾¢øܼ
´Õí¸¢¨½ó¾ ÅÇ÷¨Â º¢ó¾¢ì¸ Óʸ¢ÈÐ
º¡Á¡É¢Âý º¡¾¨É¡Çáö Á¡ÈÓÊÔõ- ¬É¡ø
º¡¾¨É¡Ç÷ º¡Á¡É¢Âáö Á¡ÈÓÊÔõ ±É
¯í¸¨Ç ¸ñ¼À¢È̾¡ý ¯Ä¸õ ¦¾Ã¢óЦ¸¡ñ¼Ð
º¡¾¨É ¦ºöÂòÐÊìÌõ º¡¾¸ô ÀȨŸÙ즸øÄ¡õ
¸Äí¸¨Ã Å¢Ç측ö ´Ç¢Õõ ±í¸û ¸Ä¡õ «ö¡§Å
¯Ä¸ò¨¾§Â ÁÉóÐÊì¸ ¨ÅòÐÅ¢ð¼
¯Ä¸ ¿¡Â¸§Ã....¿£í¸û §ÅñÎÁ¡É¡ø
þó¾¢Âò ¾¡Â¢ý ÁÊ¢ø Å¢ØóÐ àí¸¢Â¢Õì¸Ä¡õ
±í¸û ÅÇ÷¨¼ó¾ þó¾¢Â¡ ±Ûõ ¸É×

±í¸¨Ç ±ØóÐ ¿¼ì¸¨ÅòÐì ¦¸¡ñ§¼ þÕìÌõ..! Á¡Ã£Š ¾í¸Ð¨Ã

21.9.14

மண் - மனிதன்.- மாண்பு

கடந்து கொண்டிருக்கும்
காலச்சக்கரத்தை உன்னால்
தடுத்து நிறுத்த முடியுமா?
காற்று வீச கட்டளையிட முடியுமா?
காலை மலர்ந்து மாலை மடியும்
மலர்தான் உன் நிதர்சனம் -அதற்குள்
எத்தனை வீம்பு
எத்தனை வில்லத்தனம்
அடுத்தவன் தோல்வியில் ஆனந்தம்
அடுத்தவன் பொருளில் ஆசை
அதுவும் அளவில்லாத ஆசை
அன்பில்லாத அஃறிணை. குணம்
ஆயுதங்களால் அளந்து கொள்வது ஆணவத்தால் அழிவு தேடுவது
ஆண் பெண்ணென்றும்
பெண் ஆணென்றும் பிறழ்வுகள் கொண்ட மனிதா
உன்னை நீ உன் சுயமென்று சூளுரைக்க முடியுமா?
போலி வேஷம் போட்டுக்கொண்டு புனிதனாகப் பார்க்கிறாய்?
வெள்ளையில் வீதி உலா
மனதிற்குள் அமாவாசை
மக்கள் மாக்கள் ஆகலாம் -ஆனால்
மாக்கள் தன் சுயம் இழப்பதில்லை
மண் தன் பண்பினால் பாண்டம் ஆகிறது
விளைபொருளாக வினைபொருளாக
மண் மண்ணாகவே இருக்கிறது
விண் விண்ணாகவே இருக்கிறது
நீ மட்டுமே
நடிக்கிறாய்
அடுத்தவன் வயிற்றில் அடிக்கிறாய்
என்னால் முடிமெல்லாம் என முஷ்டி தட்டுகிறாய்
முதிர்வில் படுத்துவிட்டால் கூட
முற்றும் உணர மறுக்கிறாய்
உன்னை என்ன சொல்வது
கழுதை தின்னும்
காகித்த்திற்காய் (பணம் )
கண்ட வழி செல்கிறாய்
கொண்டவரைக் கொல்கிறாய்
  ஆனால்
மனிதன் தன் மாண்பினால் மண்ணாகிப்போகிறான்

22.5.14

அழகிய மான்

அழகே அழகா
எனக்கே முதலா?
ஐதர் கால புதையல் நீயா?
ஊசியின் காதில்
ஓசையின்றி நுழையும் நூல்போல் உள்ளத்தில் நுழைந்து
மையம் கொண்ட தையலே
கண்ணை மட்டும் தந்துவிட்டு
ஒளியினைப் பறித்துக் கொண்டாய்
கைத்தடியாக வருவாயா ?
காலமெலாம் கரைசேரப்பாயா
மறுத்து நீ முறைப்பாயோ ?
என் மானமதை காப்பாயா
மனம் புழுங்க விடுவாயோ

19.5.14

மழை

விவசாயி விம்மல்  கண்
விருந்து வைத்தது
மேகம் !

18.12.11

முள்ளுப்பெரியார்

விழுதுகள்தான் விண்ணை நோக்கி
ஆலமரத்தை பிடித்துள்ளது போல்
ஏமாளித்த‌ன‌ந்தான் ந‌ம் த‌மிழரனைவ‌ரையும்
ஏந்திப்பிடித்துள்ள‌து போலும்!
பிச்சை போட்டு பிழைத்த‌த‌னை
ம‌ற‌ந்துவிட்டான் ம‌னித‌ன்...
மாக்க‌ள் போல‌ மாறும‌ன‌ம்
காட்டிவிட்டான் இன்று..!
க‌னிருசித்த‌ க‌ள‌வாணி
விதையிட்ட‌வ‌னை உதைத்தான்
விம்முகின்ற‌ விவ‌சாயி வேத‌னை எவ‌ன‌றிவான்..!

5.10.11

இழப்புணி‍_ஓர் அறிமுகம்


நீங்கள் இழப்புணியை சந்தித்ததுண்டா?
  என்ன முழிக்கிறீர்கள்?  இழப்புணி என்பவர் கணவன்,குழந்தை ஆகியோரையும் சொத்தையும்,பணத்தையும் இழந்த பெண்ணைக் குறிக்கும் பதமாகும்.

சொல்லும் ‍_சொல்லாடலும்

     இல்லாமை எனும் நிலைமை இயலாமை மற்றும் முயலாமை என்ற ஆளுமை கொண்ட குடும்பத்தலைவன் (அ) தலைவியால் வருதலால் இல்லாண்மை எனும் மேலாண்மை இல்லாது போய்விடுகிறது.

சொல்லொன்று; பொருளிரண்டு..!


அஃகுள்_அக்குள்,கக்கம்
அகடச்சக்கரம்_இடுப்புஅணி(இடைவார்),கொடுங்கோல்வேந்தன்
அகடம்_அநீதி
அகத்தடியாள்_வீட்டுவேலைக்காரி,மனைவி
அகம்மியை_இழிகுலப்பெண்,பொதுமகள்(பரத்தை)
அகர்முகம்_வைகைறைப்பொழுது,விடியற்காலம்
அகலிடம்_பூமி,பரந்தநில உலகம்
அகவாட்டி_மனைவி,இல்லாள்
அகவேற்றம்_பஞ்சம்,தானியப் பற்றாக்குறை

அகாலமரணம்-ஓர் சொல்லாட்சி

         நாம் அடிக்கடி சுவரொட்டிகளில் சிலர் இறந்ததை "அகாலமரணம்" அடைந்தார் என படித்திருப்போம்.இச்சொல்லை சிறியவர்,பெரியவர் என வித்தியாசமின்றி பயன்படுத்தியிருப்பர்.ஆனால் உண்மையில் அகாலமரணம் என்பது இளம்வயது சாவை மட்டுமே குறிக்கக்கூடியது.ஏனெனில் அவர் இயல்பாக அனைவரும் உயிருடன் வாழ்ந்திருக்க வேண்டிய நாட்களை,சுகதுக்கங்களை இழந்துவிட்டதால்